Perambalur whose district the student-Education Loans going on today in the camp.
loanஏழை, எளிய மக்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்விக்கடன் பெறுவதற்காக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஆண்டு தோறும் கல்விக் கடன் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.

கடநதசில வாரங்கிளில் இரண்டு முகாம்களிலும் கலந்துகொள்ள இயலாதவர்களின் வசதிக்காக வருகின்ற 20.08.16 இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் நடைபெற்று முடிந்த முகாம்களில் கலந்து கொண்டு தகுந்த சான்றிதழ்கள் இன்றி கல்விக்கடன் பெற இயலாத மாணவ,மாணவிகளும் தகுந்த சான்றிதழ்களுடன் இம்முகாமிற்கு வருகை தந்து கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.

எனவே, கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் ( BONAFIDE CERTIFICATE ) , கல்லூரி மூலம் வழங்கப்பட்ட கட்டண விவரம் (FEES STRUCTURE) பெற்றோரின் ஊதியச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவக்கல்வி, பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

இந்த முகாமிற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.perambalur.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இதுகுறித்த மேலும்,விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் (அருள்தாசன்) 9442271994 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் (சிவா) 9445476298 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!