பெரம்பலூர்: வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது; போலீசார் விசாரணை!

schedule
2023-12-05 | 15:43h
update
2024-07-07 | 15:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Youth arrested for trying to break into house; Police investigation!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (43) என்பவர் எறையூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று ஆசாமி ஒருவர் இவரது வீட்டில் புகுந்து திருட முயன்றார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணை நடத்தியதில், திருவாரூர் மாவட்டம், முனியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகையன் மகன் தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவரை, கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 22:04:54
Privacy-Data & cookie usage: