பெரம்பலூர்: தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் க.அறிவழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
பெரம்பலூர் கோட்டததிற்கு உட்பட்ட ஆலம்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.11) பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலாம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டப்புதூர் மின் பகிர்மான பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.