பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் (பொ) ப.மதுசூதன் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கும் சிறப்பு திட்டத்தில் காலியாக உள்ள இரண்டு கணினி இயக்குபவர் (டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் – மாத தொகுப்பூதியம் ரூ.7,500-) பணியிடத்திற்கு இளங்கலை பி.எஸ்.சி., கணினி, தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பட்டய சான்று பெற்ற தகுதி உள்ள நபர்கள் 15.6.2015 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இப்பணியிடத்தில் சேரும் நபர்கள் பணியின் தேவைக்கேற்ப எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து வெளியேற்றம் செய்யப்படுவார்கள். இப்பணியில் சேருபவர்கள் பின்னர் எவ்வித பணியுரிமையோ, முன்னுரிமையுமோ கோர இயலாது.

எனவே இந்த தற்காலிக பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!