பெரம்பலூர்: வேப்பந்தட்டையை அருகே உள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் மூக்கன் (47). இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் பெரியவடகரை சென்று விட்டு வெண்பாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பெரியவடகரையை சேர்ந்த பழனிசாமி (52) என்பவர் வெண்பாவூர் வந்து விட்டு பெரியவடகரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இதனிடையே வெள்ளாற்று பாலம் மீது சென்று கொண்டிருந்த போது சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் மூக்கன், பழனிசாமி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!