downloadபெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (40), இவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்புக்காக வெளி நாடு சென்று விட்டார்.

இந்நிலையில் அவரது தாய் சின்னம்மாள் மகன் பாசத்தால் தவித்து ஏங்கி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சின்னம்மாள் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை அருந்தினார். அங்கிருந்தவர்கள் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து வ.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!