பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி ரேவதி (21), இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த ஆக.30ம் தேதி மனமுடைந்த ரேவதி மண்ணென்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த ரேவதி சிகிச்சைக்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சையின் போது இன்று உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். இது குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் மதுசூதன் விசாரித்து வருகிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!