Fraudster arrested for showing fake identity card as Minister Duraimurugan’s aide

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனலட்சுமிசீனிவாசன் மருத்துவ கல்லூரி உள்ளது. கடந்த 30.03.2022-ம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை பன்னீர்செல்வம் (70) , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தான் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் என கூறி தனது தங்கையின் கணவர் கட்டபொம்மன் (65), என்பவருக்கு இதயநோய் சிகிச்சைக்கு சேர்த்து சிகிச்சை பெற்றதாகவும் பின்னர் சிகிச்சைக்கான தொகை ரூபாய் 3500 கேட்டதற்கு தராமல் அமைச்சரின் உதவியாளர் என அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். அதில் சந்தேகமடைந்த தனலட்சுமி மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மேலாளர், பன்னீர்காட்டியது அடையாள அட்டை போலியானது என்பதை உறுதி செய்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், போலீசார் மருத்துவமனைக்கு சென்று மோசடி செய்த பன்னீர்செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!