In Perambalur at the government land grab: public petition with the authorities many times retrieving tardy
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் அருகே உள்ள காரியானூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெருநிலா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்துள்ள மனு :
பெருநிலா கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அதனருகே அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் உள்ளது. அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பள்ளி மாணவர்களுக்கோ பயன்படும் வகையில் உள்ளது. அதனை கடந்த சில மாதங்களாக அதே ஊரை அதிமுக பிரமுகர் ஒருவர் அந்த இடத்தை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இது குறித்து வருவாய்துறை , பள்ளிக் கல்வித்துறை, காவல் துறை, என பல தரப்பு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து தலைமைச் செயலகத்திற்கும், மனு கொடுக்கப்பட்டு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மாவட்ட ஆட்சியரான தாங்களாவது நடவடிக்கை எடுத்து 25 லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தை மீட்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.