In Perambalur near consecration ceremony at the temple tomorrow
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டியில் புதிதாக திருப்பணிகள் முடிக்கப்பட்ட ஸ்ரீவிநாயகர், மாரியம்மன், மற்றும் கம்பம் பெருமாள், நவகிரக கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நாளை காலை நடைபெற உள்ளது.
குடமுழுக்கு விழா காலை ஈச்சம்பட்டி யாதவ சமுதாய மக்கள் சார்பில் நடத்தப்படும் இவ்விழா காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸா குதி, பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனையுடன் துவங்குகிறது.
காலை 9.15 மணி அளவில் யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10 மணிக்கு விமானங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுகிது. 10 மணிக்கு அன்னதானம், சுவாமி திருஉலா நடைபெறுவதாக கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.