#Interviews for applicants for Veterinary dept

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் தேர்வு திருச்சி மண்டலத்தில் 26.12.2016 முதல் 30.12.2016 வரை தினமும் காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு கோழி அபிவிருத்தி கழக வளாகம், புதுக்கோட்டை மெயின்ரோடு, கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி – 620 023 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை www.tn.gov.in , என்ற இணைய தளத்திலிருந்து 22.12.2016 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேர்முக அழைப்பாணைகளை 23.12.2016 மற்றும் 24.12.2016 ஆகிய நாட்களில் கால்நடைத்துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப் படமாட்டார்கள் .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!