kargum bharatham for everyone to become beneficiaries. Exam from 21 basic literacy in perambalur

exam-writeகற்கும் பாரதம் திட்டத்தில் 15 – 80 வயதிற்குள் எழுத படிக்க தெரியாத பயனாளிகள் அனைவருக்கும் ஆக. 21 ல் அடிப்படை எழுத்தறிவு தேர்வு என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் 15 வயதிற்கு மேல் 80 வயதிற்குள் எழுதபடிக்க தெரியாத பயனாளிகள் அனைவருக்கும் வரும் ஆக. 21 அன்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வு நான்கு ஒன்றியங்களில் உள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 295 பயனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், இத்தேர்வினை கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்றவர்களும் இத்தேர்வினை எழுதலாம். மேலும் கடந்த முறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!