On behalf of Aswins, Corona Relief Assistance to Para Athletes, Founder K.R.V. Presented by K.R.V. Ganesan.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு தொடர்ந்து அஸ்வின்ஸ் குழுமத்தின் சார்பில் எண்ணற்றோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரா ஸ்போர்ட்ஸ் (மாற்றுதிறனாளிகள் விளையாட்டு வீரர்கள்) மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கத்தைச் சேர்ந்த 25-குடும்பங்களுக்கு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலையில் உள்ள அஸ்வின்ஸ் தலைமையகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அஸ்வின்ஸ் குழுமத் நிறுவன தலைவர் கே.ஆர்.வி.கணேசன் அரிசி மளிகை காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.மேலும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி நம்பிக்கையூட்டினார். நிவாரண உதவியை பெற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள் அஸ்வின்ஸ் குழுமத்திற்கு நன்றி தெரிவித்தனர்.