Public Relations Camp at Periyavatakarai village near Perambalur: Welfare assistance worth Rs.8.36 lakh
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பெரியவடகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பெரியவடகரை பகுதியை சார்ந்த மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சுகாதாரம், நியாய விலைக் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.
மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள்; கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச்சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
இந்த முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவி தொகையாக 15 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்திற்கான காசோலையையும்,
20 நபர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகையாக மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையாக 6 நபர்களுக்கு மொத்தம் ரூ.72 ஆயுிரத்திற்கான காசோலைகளையும், 13 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களையும், 13 நபர்களுக்கு பட்டா மாற்ற ஆணைகளையும், 15 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும்,
வேளாண்மைத்துறையின் மூலம் 6 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 500 க்கான காசோலைகளையும, தோட்டக் கலைத் துறையின் மூலம் 1 நபருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான பவர் டிரில்லரும், புதுவாழ்வு திட்ட உதவிதொகையாக 5 நபருக்கு ரூ. 50 ஆயிரமும் ஆக மொத்தம் 94 நபர்களுக்கு மொத்தம் ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சாந்த அரசு அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கொண்டனர்.