perambalur near public in the petition demanding drinking water the collector’s office

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்டது கோரையாறு. மாவட்டம் முழுவதும் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை போன்றே கோரையாறு பகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதியில் இருந்த இரு ஆழ்குழாய் கிணறுகளும் பழுதடைந்து விட்டன. அதுவும் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்து.

கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாட்டால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகிக்கப்படும் தண்ணீர் ஓரிரு குடங்களே கிடைப்பதால் அவதிப்பட்டு வருவதாகவும், தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 பேர் மனு கொடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!