Private Home admins appeal to Perambalur collector

பெரம்பலூரில் இயங்கி வரும் சுமார் 7 காப்பங்களில் தங்கி உள்ள சிறுவர்களுக்கு போதுமான சுத்தம், சுகாதாரம் செய்து தரப்படவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் பேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகார் உண்மை என தெரியவந்ததால் அந்த காப்பங்களுக்கு சீல் வைத்தனர்.

இன்று அந்த காப்பக நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து ஒரு சில நாட்களுக்குள் குறைகளை களைந்து சீர் செய்வதாகவும், தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் ஏனையோர்கள் ஆதரவற்றவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பதால் தற்போது அவர்களை தங்க வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட கால அவகாசத்தில் குறைபாடுகளை சரி செய்து கொள்வதாக இன்று நிர்வாகிகள் ஆட்சியருக்கு கொடுத்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!