Set in the drainage of the public petition demanding in Perambalur arch Kamarajar
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில் காமராஜர் வளைவு அருகே உள்ள மேட்டுத் தெருவில் 22 குடும்பங்களும், 10 க்கும் மேற்பட்ட கடைகளும் இயங்கி வருகின்றன. அந்த தெருவில் போதுமான அளவிற்கு சாக்கடை வசதி இல்லாததால் பாதாள சாக்கடை அமைத்து தர வேண்டி எடுக்க கோரி பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர். மனு பெற்றுக் கொண்ட நகராட்சி ஊழியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.