not pay a fee to see the sealing of TASMAC liquor drinkers bar
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தினுள் இயங்கி வரும் மதுபான பாருக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தினுள் அரசுக்கு சொந்தமான பார் ஏலத்திற்கு விடப்பட்டு இயங்கி வருகிறது. ஏலதாரர் மனோஜ் என்பவர், கடைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 1லட்சத்து 36 ஆயிரம் பாக்கி நிலுவைத் தொகை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செலுத்த தவறியதாலும், அதிகாரிகள் இது குறித்து முன் எச்சரிக்கையும் செய்து உள்ளனர். தவணை தவறியதால் இன்று காலை அந்த மதுபான கூடத்திற்கு பெரம்பலூர் டாஸ்மாக் மேலாளர் முரளி தலைமையில் சீல் வைத்தனர்.