ம்Unoccupied house burnt down near Perambalur: Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அருகே உள்ள கடம்பூர் கிராமம் காட்டுகொட்டகை பகுதியில் வசித்து வருபவர் கிட்டு மகன் கோபி (45), இன்று கோபியும், அவரது மனைவி இருவரும் ஆடு மேய்க்க சென்றுவிட்டனர். அவரது மகன் சேரனும் கடம்பூர் சென்றுவிட்டார். இந்நிலையில் மதியம் சுமார் 1.30 மணி அளவில் வீடு தானாக தீப்பற்றி எரிவதாக அப்பகுதியில் வசிக்கும் சோலைமுத்து என்பவர் கொடுத்த தகவலின் பேரில், பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரவிக்கப்பட்டது, ஆனால், அவர்கள் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும், வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது. இது குறித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.