Welding worker’s death near Perambalur

பெரம்பலூர் அரியலூர் சாலையில் அருமடல் பிரிவு பாதை என்ற இடத்தில் உள்ள அரசு மதுபான கடை அருகே வெல்டிங் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில், உள்ள பஸ் பாடி பில்டர் கடையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராஜா என்கிற ராஜாஜி(40), என்பதும், மது குடிக்கும் பழக்கம் உடையவர், திடீரென ஏற்பட்ட காக்காவலிப்பால் தவறி விழுந்ததில் உயிரிழந்து இருக்கலாம் என தெரிய வந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவரது இறப்புக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!