Woman who went to the temple for darshan at the gold chain theft near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, இவரது மனைவி பேபி (வயது 42), என்பவர், அதே பகுதியில் உள்ள பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.