Youth killed; Two-wheeler, Auto collision: near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருதையான் கோவில் என்ற இடத்தில், டூவீலர் மீது டாட்டா ஏசி ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில், டூவீலரை ஓட்டிச்சென்ற அதே பகுதியில் உள்ள அழகிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 25)என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், டூவீலரில் பயணம் செய்த அஜித்குமார் (25) படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.