Power contract workers strike in Perambalur demands!

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட தொழிலாளிகள், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அரசும், வாரியமும் அறிவித்தபடி தினக்கூலி ரூபாய் 380/-ஐ அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கி உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும்,

கே2 மற்றும் சிட் அக்ரிமெண்டில் பல ஆண்டுகாலம் பணி செய்த ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு தின கூலி அடிப்படையில் பணி நியமனம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தானே, வர்தா, கஜா, ஒக்கி புயல்கள் பாதிப்பின் போது தமிழ் நாட்டை தலை நிமிர வைத்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரித்திடவும், ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவதை கைவிட்டு, பணிச் சான்றிதழ் வழங்கவும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காணவும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த, ஏராளமான பெரம்பலூர் வட்டக் கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

மாநில செயலாளர் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தார். அபிமன்னன், தர்மராஜ். மலரவன், கருப்புசாமி, வினோதன், குப்புசாமி, மணி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பன்னீர்செல்வம் மறியல் உரையாற்றினார். வட்ட பொருளாளர்., இளங்கோவன் மாநில செயற்குழு உறுப்பினர், கண்ணன் வட்ட பொருளாளர். மற்றும் வட்ட நிர்வாகிகள். கண்ணன், ஆறு முகம், மணி, மாவட்ட தலைவர் ரெங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார். . CITU , விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஏ.கே..ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் கருணாநிதி, சிவானந்தம், மாற்றுத் திறனாளி சங்க மாவட்டக்குழு செல்லமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!