Power Distribution Outage of Electricity in Erumapatti in Namakkal District: TNEB Notification
இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்ரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம் கோம்பை,பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப் பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.