Power outage notice at Perali substation
பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வரும் மார்ச். 2 புதன் கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கவுல்பாளையம், பேரளி, மருவத்தூர், ஒதியம், பீல்வாடி, கல்பாடி, குரும்பாபாளையம், வாலிகண்டபுரம், கீழப்புலியூர், செங்குணம், கீ.புதூர், அசூர், எஸ்.குடிக்காடு, ஆகிய கிராமங்களில் அறிவிக்கபட்ட தினத்தில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.