கார் மோதி விபத்து : விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.
சென்னையிலிருலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற இனோவா கார் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் டூவீலரை ஓட்டி வந்த கோவிந்தசாமியும், பின்னால் அமர்ந்திருந்த குருசாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடி தலைமறைவான கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றார்.