இவர்கள் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பயன்படுத்த 727 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 860 கட்டுப்பாட்டுக்கருவிகளை இன்று எடுத்துவந்தனர். இந்தக்கருவிகள் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக அடுக்கிவைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் 21.1.2016 அன்று பீஹார் மாநிலத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர சென்றுள்ளனர். அவர்களும் விரைவில் 144 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 500 கட்டுப்பாட்டுக்கருவிகளை பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.