Private companies must participate in the employment camp; Perambalur Collector Information
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜன.31 ஞாயிறு அன்று காலை 8.00மணி முதல் 3.00மணி வரை சிறுவாச்சூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள இருப்பதால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னனி நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், தங்கள் நிறுவனத்தின் பெயர் காலிபணியிட விவரங்களை 9499055913 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.