Private sector employment camp for differently abled persons; Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் பெரம்பலூர் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.03.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

முகாமில் 40க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1200க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச பயிற்சிக்கான பதிவு, அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கான பதிவு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் உதவி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அரங்கம் முகாமில் இடம் பெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சுய குறிப்பு விவரம் , மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்று ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!