Private sector employment camp in Perambalur: District Collector V. Santha Information

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக 08.06.2018 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் சென்னையினைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனர்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயது வரையுள்ள தகுதி வாய்ந்த பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. தகுதியுடைய நபர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்கள், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் 08.06.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!