Private sector placement camp; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் இணைந்து, பெரம்பலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஏப்.23 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பெரம்பலூரில் உள்ள கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு கலை, அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ பொறியியல் படித்துள்ள 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் (இருபாலர்) கலந்து கொள்ளலாம்.
இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 2,500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயகுறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம் என்றும்,
மேலும், விபரங்களுக்கு 04328-225362 மற்றும் 9444094325 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.