Public blockade of Perambalur municipality with empty Pots!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில், கடந்த 15 நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் இன்று காலை, சங்குப்பேட்டை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சேலம் – ஆத்தூர், துறையூர் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் 15 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து காவல், மற்றும் வருவாய் துறை, நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தின் பேரில் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!