Public grievance day meeting; 193 petitions in Perambalur Collectorate
கொரோன காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டு மனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 193 மனுக்கள் பெறப்பட்டது.
மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் சிறுசேமிப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற 36 பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், 2020-21ஆம் ஆண்டில் சிறுசேமிப்பில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய எஸ்.ஏ.எஸ். எம்.பி.கே.பி.ஒய். சேர்ந்த 6 முகவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கினார். மேலும் சமூக நலத்துறையின் 10 திருநங்கைகளுக்கு மின்னனு அடையாள அட்டையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
ம.பாரதிதாசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.