Public Grievances Day meeting: 283 people filed a petition


#பெரம்பலூர் : திங்கட்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப் பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 283 மனுக்களை மாவட்ட ஆட்சிப் பணியாளரிடம் நேரடியாக கொடுத்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சிப் பணியாளர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) துரை, உதவி திட்ட அலுவலர் பிரேமாவதி உட்பட அரசு அலுவலர்கள், துறைரீதியான பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!