Public meeting to present budget on behalf of DMK! Perambalur District Secretary Report!

பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம். சி. ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 19.03.2022 அன்று தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அரசு ஊழியர், ஆசிரியர்-மாணவர்- மகளிர், கழனியில் ஈடுபடும் உழவர்- ஆலையில் உழைக்கும் தொழிலாளி – வேலை வாய்ப்பில்லாதோர் -மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் நிதி நிலை அறிக்கையின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையிலும் – நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வரலாறு காணாத பெரு வெற்றியை கழகத்திற்கு வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேரடித்திடலில் 09.04.2022.(சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்தின் (நான்) தலைமை வகிக்கிறேன்.

பெரம்பலூர் எம்.எல்.ஏவும், நகர கழகச் செயலாளமான எம்.பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். இதில் போக்குவரத்துத்தறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர்கள் இரா.கிரிராஜன் – ஆடுதுறை உத்திராபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

இதில் மாநில நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அனைத்து அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு,மற்றும் கிளைக்கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!