Public road blocking protest against drinking water at Perambalur Traffic impact !!

பெரம்பலூர் அருகே உள்ளது குரும்பலூர் பேரூராட்சி, இப்பேரூராட்சியில் கடந்த சில வாரங்களாக முறையற்று குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த அவர்கள் நிறைவேற்றவில்லை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை பெரம்பலூர் – துறையூர் சாலையில் காலிகுடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெரம்பலூர் – துறையூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!