Ramanathapuram Senior Graduate Teachers Demonstrated

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பிளஸ் 2 பொது தேர்வு பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கான சம்பளம் வழங்க கோருதல் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வு பணி மற்றும் விடைத்தாள் பணிகளுக்கான உழைப்பு ஊதிய அரசானண கடந்தாண்டு வெளியிட்டும் இன்னும் உயர்த்தி வழங்கப்படவில்லை.

உடனடியாக உயர்த்தி வழங்க கோரியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் உடனடியாக வழங்க கோருதல் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சாந்தா கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் பள்ளி செயலாளர் தனசேகரன், சட்ட செயலாளர் வன்மீகநாதன், பிரச்சார செயலாளர்கருப்பசாமி, செய்தி தொடர்பாளர் ரிக்ஸ் சேவியர், தலைமையிட செயலாளர் சரவணக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் நாகவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!