Ramanathapuram single palm tree kaliyamman temple kumbabhishekam
ராமநாதபுரம் ஓம்சக்திநகர் ஒற்றை பனைமரத்து காளியம்மன் மற்றும் மடப்புரம் காளியம்மன் பாண்டிமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பக்ஷைஜ, கோபுஜையுடன் ஆறு கால யாகசாலை புஜை நடந்தது. ஆறாம் கால யாகசாலை புஜை முடிந்து காலை மகா புர்ண தீபாராதனையும் அதனை தொடர்ந்து கடம்புறப்பாடு நடந்தது.
ரவி குருக்கள் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க விமானங்களுக்கும் மூலவர் மற்றும் பரிவார முர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காளியம்மனை வணங்கினர். அவர்களுக்கு கும்பம் நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மஹா அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் திருக்கல்யாணமும் திருவிளக்கு பக்ஷைஜயும் நடந்தது. விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.