பெரம்பலூர் அருகே பெண்ணிடம், 7 பவுன் தங்கசெயினை பறித்த ஹெல்மெட் கொள்ளையர்கள்!

schedule
2023-08-30 | 17:25h
update
2023-08-30 | 17:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Robbers stole 7 pound gold chain from a woman near Perambalur!

கற்பனை காட்சி

பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த வெங்கனூரை சேர்ந்தவர் கந்தசாமி மகள் மஞ்சுளா (40), இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இன்று பணியை முடித்து கொண்டு மதியம் தனது ஸ்கூட்டியில், கிருஷ்ணாபுரத்திலிருந்து வெங்கனூரை நோக்கி பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை அருகே வழிமறித்த, அடையாளம் தெரியாத ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள், மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் அப்பகுதியிலும், வழித்தடத்திலும் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 01:28:22
Privacy-Data & cookie usage: