Rs. 5.45 lakh beneficiaries of welfare benefits provided to the district collector Perambalur at Public Grievances Day meeting

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 5.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

gdp-perambalur

திங்கட்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனை பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 392 மனுக்களை பொதுமக்ககள் கொடுத்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறையின் சார்பில் மாற்றியமைக்கப்ட்ட பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தில்,

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் சிதம்பரம், கல்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் ராஜ் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து தலா ரூ.1.75 லட்சத்திற்கான காசோலைகளையும்,

நாரணமங்கலம் பால் உற்பத்தியாளர;கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் அழகேசன் சாலை விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து ரூ.1.95 லட்சத்திற்கான காசோலைகளையும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!