நேற்று இரவு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொச்சியம் ஆதிதிராவிடர் காலனி மாரியம்மன் கோவில் அருகில் சரவணன் என்பவருடன் 13 நபர்கள் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1,01,000 மதிப்பிலான ரொக்கத்தை கருணாநிதி தலைமையிலான கூடுதல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கண்டுபிடிக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருவாய் கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.