hostel-room1பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ மாணவியர்கள் சேர்க்கைகான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ – மாணவியர்கள் சேர்க்கைக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினிகளிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று, விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விடுதி காப்பாளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 23.06.2016 -க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது ஆதிதிராவிடர் நல இயக்குநர் உத்தரவின்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகளிடம் சமர்ப்பிப்பதற்கு 04.07.2016 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ – மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!