Shield, Collector presents appreciation to 3 best performing primary schools in Perambalur district!

அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதற்கும், தரத்தை உயர்த்துவதுடன், மாணவர்களின் சேர;க்கையை அதிகரித்திடவும், தலைமையாசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு கல்வி ஆண்டும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வி திறன், மாணவர் சேர்க்கை, பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சார்ந்த இதர செயல்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், 2018-19ஆம் கல்வி ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வி திறன், மாணவர் சேர்க்கை, பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சார்ந்த இதர செயல்பாடுகளின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் நேரு மானிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் வெங்கட பிரியா கேடயங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோவன், சாந்தப்பன், ஜோதிலட்சுமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!