கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தவர் தவறி விழுந்ததில் சாவு

schedule
2016-02-28 | 16:32h
update
2026-03-27 | 13:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் கிராமம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் அய்யாசாமி (55). இவர், அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் மாடி வீட்டுக்கு கடந்த 20 ஆம் தேதி தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

Advertisement

பலத்த காயமடைந்த அய்யாசாமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் பெரியசாமி (30) அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 13:23:25
Privacy-Data & cookie usage: