Special manuneeti closing day camp in the village of Elumur

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமுர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் சிறப்பு மனுநீதி நிறைவுநாள் விழா நடைபெற்றது ரூ 50 லட்சத்து 28 ஆயிரத்து மதிபிலான நல திட்ட உதவிகள் வழங்கபட்டது.

இக்கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலமை தாங்கினார்.

இக்கூட்டதில் ஊராக வளர்ச்சி துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, உள்ள அனைத்து துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் அத்திட்டங்கள் மூலமாக பயன் பெறுவதற்குண்டான வழிமுறை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில் அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் மக்களை தேடி அரசு நிர்வாகம் இது போன்ற முகாம்கள் மாவட்டத்தில் பல பகுதியில் நடத்தபடுகின்றன.

அதன்படி கடந்த மாதம் முழுவதும் எழுமுர் உள்ளிட கிராமங்களிலில் அரசு அலுவலர்கள் முகாமிட்டு தங்கள் துறை சார்ந்த மக்கள் நல திட்டங்களை கண்டறிந்து அதன் மூலம் நேற்று பல்வேறு துறைகளின் சார்பில் 117 பயனாளிகளுக்கு ரூ 50 லட்சத்து 28 ஆயிரத்து மதிபில் நலதிட்ட உதவிகள் வழங்கபட்டன எனவும், இந்த மனுநீதி முகாமில் 63 மனுக்கள் பெற பட்டு 41 மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க பட்டது 22 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் மனோன்மணி, தலமையிடத்து வட்டாச்சியர் வனிதா, வட்ட வழங்கல் அலுவலர் மாயகிருஷ்ணன், வருவாய் ஆய்வளர் பாக்கியராஜ், குறு வட்ட அளவர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர்கள் மணிமேகலை, அகிலன் எழு முர். கிராம நிர்வாக உதவியாளர் ராஜா எழுமுர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!