English Summary : Special Mass Conduct Programme after tomorrow at the closing ceremony on the 20th of July in Perambalur going on near T.Kalattur the Panchayat.

சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாளை மறுநாள் ஜுலை 20 ம் தேதி து.களத்தூர் ஊராட்சியில் நடக்கிறது.

SPL-mcp-T.kalathur

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட து.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே சிறப்பு மனுநீதி நாள் நிறைவு நாள் விழா மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், சுகாதாரம், நியாய விலைக் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குறித்த கோரிக்கைகள், பொதுமக்களின் தேவைகள் பற்றி அதிகாரிகள் தரப்பிலும், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அன்று கலந்து ஆலோசிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களாக கொடுத்து பயன் பெறலாம்.

அன்றைய தினம் கோட்டாசியர் இரா.பேபி, வட்டாச்சியர் ச.சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாசியர் சி.முருகன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!