Start Tomorrow, Namakkal Anna Government College Admission Counseling
நாமக்கல் அரசு அண்ணா கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகியது.
இதுகுறித்து நாமக்கல் அரசு அண்ணா கல்லூரி முதல்வர் (பொ) வசந்தாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் அரசு அண்ணா கல்லூரியில் 2018-19ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவு மாணவ, மாணவியர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
நாளை 5ம் தேதி சிறப்பு பிரிவினர் (முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், என்சிசி மற்றும் விளையாட்டுத்துறையில் சிறப்பு பெற்றவர்களுக்கு) கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாளை 6ம் தேதி புதன்கிழமை பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளின் மொத்த மதிப்பெண் 500க்கு மேல்பெற்றவர்களுக்கும், 7ம் தேதி வியாழக்கிழமை பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளின்மொத்த மதிப்பெண் 500க்கு குறைவாக பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
விண்ப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் கலந்தாய்வு கடிதம் கிடைக்கப்பெறாவிட்டாலும் தவறாது தங்களுக்குரிய தேதிகளில் அசல் மற்றும் நகல் சான்றிதழுடன் பங்கேற்றலாம் என தெரிவித்துள்ளார்..