Student Training Center in Ashok Leyland Driving Training Center, Namakkal

நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் உள்ள அசோக் லேலண்ட் டிரைவர் பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கான பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளிபுரம் அருகே அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சார்பில் சர்வதேச தரத்திலான டிரைவர் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் 24ம் ஆண்டு விழா மையத்தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மெக்கானிக், இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கான பராமரிப்பு மற்றும் பயிற்சி மையத்தை, நாமக்கல் பி.ஜி.பி கல்வி நிறுவனத் தாளாளர் கணபதி திறந்து வைத்தார்.

நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் ஐடி கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!