Supply-related public redressal camp in perambalur district

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே..சாந்தா விடுத்துள்ள தகவல் :

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம்

பெரம்பலூர் வட்டம், எளம்பலூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலர் (பொ) அ.மனோகரன் தலைமையிலும்,

வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ), பெ.பாண்டியன் தலைமையிலும்,

குன்னம் வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் ந.கதிரேசன் தலைமையிலும்,

ஆலத்தூர் வட்டம், அழகிரிபாளைம் கிராமத்தில் துணைப் பதிவாளர், பொது விநியோகத்திட்டம் ப.சுப்பிரமணியன் தலைமையிலும் 10.6.2017 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!