Tailoring training for transgender people in Perambalur district on behalf of the Government of Tamil Nadu
மகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் மகளிர் நல அலுவலரின் ஒருங்கிணைப்புடன் பயிற்சி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது ஒரு மாதம் நடைபெறும். இப்பயிற்சியில் முககவசம், பாவாடை, சாதா மற்றும் நவீன வடிவமைப்பு கொண்ட ரவிக்கை (பிளவுஸ்) மற்றும் சுடிதார் போன்றவை தைத்திட பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.
இதன்மூலம் சுயதொழில் புரிந்திட, வங்கிகளில் கடன் பெறுவதற்கும், அரசின் இலவச தையல் இயந்திரங்கள் பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என பெரம்பலூர் கலெக்டர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.